search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளிப்பட்டறை உரிமையாளர் கைது"

    16 வயது பெண்ணை சீரழித்த வெள்ளிப்பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டியது அம்பலமானது.

    சேலம்:

    சேலம், செவ்வாய்ப்பேட்டை, தொழுவர் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தனது வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கால் கொழுசு செய்து, ஆர்டரின் பேரில் மொத்தமாக நகைக்கடைகளுக்கு அனுப்பி வைத்தும் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த வெள்ளிப்பட்டறையில் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சரவணன் தனது வலையில் வீழ்த்தினார்.

    மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் சரவணன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கதறி அழுதார்.

    இதனை தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் சரவணன் அந்த பெண்ணை அழைத்துச் சென்று நேற்று பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து தாலி கட்டினார்.

    இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஏமாற்றிய வெள்ளிப்பட்டறை உரிமையாளர் சரவணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா தேவி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சரவணனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மனைவி தற்போது 3-வது முறையாக கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் தான், சரவணன் தனது வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

    இப்பெண் 9-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். மேற்கொண்டு கல்வி பயில வசதி இல்லாததால் குடும்ப சூழ்நிலை கருதி, வெள்ளிப்பட்றையில் வேலைக்கு சேர்ந்தார்.

    இதை பயன்படுத்தி அந்த அப்பாவி பெண்ணை சரவணன் தனது காம வலையில் வீழ்த்தி இருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை சரவணன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாகவும், இந்த வீடியோவை சரவணன் காட்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி மிரட்டி பல முறை உல்லாசமாக இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×